ஓய்னம் பிந்தியா தேவி
மாநிலம் : மணிப்பூர்
மாவட்டம் : பிஷ்ணுபூர்
தொகுதி : மொய்ராங்
கிராமம் : தெராகொங்சாங்பி
சுய உதவிக் குழு : இபுதௌ தாங்ஜிங் சுயஉதவிக் குழு
வாழ்வாதார நடவடிக்கைகள் : வேளாண்மை, பன்றி வளர்ப்பு மற்றும் நெசவுத் தொழில்
லக்பதி தீதியின் பயணம் :
அவர் குழுவில் இணைந்து, ஒரு சுயஉதவிக் குழு உறுப்பினராக நிதி மற்றும் மனரீதியான ஆதரவைப் பெற்றார். இப்போது அவரும் அவரது கணவரும் விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்கிறார்கள். ஆண்டு விளைச்சல் 60 மூட்டை நெல் ஆகும், இதில் 13 மூட்டைகள் நில உரிமையாளருக்கு வழங்கப்படுகின்றன. அவரும் அவரது கணவரும் பன்றி வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர், மேலும் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் 10 பன்றிக்குட்டிகளை வாங்க சுமார் ரூ. 60,000 முதலீடு செய்கிறார்கள். 6 மாத காலத்திற்குப் பிறகு அவர்கள் ஒவ்வொரு பன்றியையும் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை விற்க முடிகிறது. இக்குடும்பம் பன்றி வளர்ப்பின் மூலம் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ரூ. 1,40,000 முதல் 1,90,000 வரை நல்ல லாபம் ஈட்ட முடிகிறது மற்றும் ஆண்டுக்கு பன்றி வளர்ப்பில் மட்டும் ரூ. 3 லட்சத்திற்கு மேல் எளிதாக சம்பாதிக்க முடிகிறது. அவர் பாரம்பரிய ஆடைகளை நெசவு செய்கிறார், மேலும் அவரிடம் ஒரு தறியும் தையல் இயந்திரமும் உள்ளது.